ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2009

இனியாவது உருப்படு ! ! !

ராதேக்ருஷ்ணா 
 
ஒவ்வொரு நாளும் உலகத்தில் கோடி கோடி 
விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது !
யாருக்கும் அதன் ரகசியங்கள் உள்ளபடி
தெரியாது ! தெரிந்துகொள்ளவும் முடியாது !
 
தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய் ?
 
உன்னுடைய பகவானைத் தவிர 
வேறு எதைத் தெரிந்துகொண்டாலும் 
உனக்கு நிச்சயம் நிம்மதியில்லை ! 
 
இத்தனை வருஷங்கள் பல உலகாயத 
விஷயங்களை தெரிந்துகொண்டாய் !
அதில் உனக்கு என்ன கிடைத்தது ? 
 
தெரியாத பல விஷயங்களுண்டு !
அதனால் என்ன நஷ்டம் அடைந்தாய் ?
 
உன் கடமை பக்தி செய்வதே !
அதை ஒழுங்காக செய்வதே 
உன் வாழ்வின் முக்கிய நோக்கம் !
இனியாவது உருப்படு ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP