ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 அக்டோபர், 2009

எதுவும் சரியில்லை !

ராதேக்ருஷ்ணா 


உலகம் சரியில்லை ! ஜனங்கள் சரியில்லை !
இயற்கை சரியில்லை ! உடம்பு  சரியில்லை !
விதி சரியில்லை ! கணவன் சரியில்லை ! 
மனைவி சரியில்லை ! குடும்பம் சரியில்லை !
குழந்தைகள் சரியில்லை ! பந்துக்கள் சரியில்லை !
அலுவலகம் சரியில்லை !
உடன்  வேலை செய்பவர்கள் சரியில்லை ! வேலைக்காரர்கள் சரியில்லை !
முதலாளி சரியில்லை ! அரசாங்கம் சரியில்லை !
வாழ்க்கை சரியில்லை ! மனது சரியில்லை !
எதுவும் சரியில்லை ! 
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் !
இன்னும் எத்தனை காலம் 
இப்படி சொல்லிக்கொண்டு 
வாழ்க்கையை வீணடிப்பதாக உத்தேசம் !

ஆனால் க்ருஷ்ணன் எப்பொழுதும் சரியாக இருக்கிறானே !
அது ஏன் உன் மனதிற்கு தெரிவதில்லை !
அவன் மட்டுமே என்றும் சரியாக இருக்கின்றான் !
அவனை மட்டும் நம்பு ! அது மட்டுமே  சரி ! 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP